‘கவிதை’ பகுப்புக்கான தொகுப்பு

h1

என் உயிர்த்தோழி

ஜூலை 30, 2008

என் உயிர்த் தோழியே

எங்கிருக்கிறாய் நீ

 

என் இத்துணை வருட வாழ்வில்

என் தோழியென

எனைக் கடந்து சென்றோர் பலர்

ஆனால் நீ மட்டும்

என்னுள் நீக்கமற நிறைந்து விட்டாய்.

 

என்னிடம் உன்

புகைப்படம் இல்லை ஆனால்

என் இதய சுவரெங்கும்

எண்ணெமென்னும் வண்ணத்தூரிகையால்

உன் முகம் தீட்டியுள்ளேன்.

 

எதிர்காலக் கனவுகள்

பளிச்சிட்ட கண்களில் இன்று

தாய்ப்பாசம் உரையுமோ?

 

இளமை ஊஞ்சலாடிய

தேகத்தில் காலதேவன்

தீட்டிய ஓவியம்

வரிகளென வெளிப்படுமோ?

 

நான் தனிமையில் சிந்தித்தால்

பசுமையான நினைவலைகள்

மனதைத் தழுவிச் செல்கின்றது

 

தமிழகத்தின் தலைநகரில்

திக்குத் தெரியாமல்

பேருந்தில் பயணித்த நாட்களும்

வேலை தேடித்திரிந்த நாட்களும்

வேலை கிடைக்காத பொழுது

தேடிய ஆறுதல்களும்

மிகவும் இனிமையான

நாட்கள் அவை.

 

என் இதயத்தின்

ரகசியங்கள் அறிந்தவள் நீ

உன் வாழ்வின் குறிக்கோள்

உணர்ந்தவன் நான்

 

வாழ்க்கை ஓட்டத்தில்

நாமிருவரும் விலகிச் சென்றுவிட்டாலும்

உன்னுடனான என் நட்பு

என்றும் மறையாது அதை

நீயும் அறிவாய்.

 

அலைபேசியும் மின்னஞ்சலும்

இன்று நம்மைப் பிணைக்கும்

புதிய நண்பர்கள் – அவையும்

சில நேரம் மறந்துவிடுகின்றன

ஆனால் நட்பு மறையாது மறக்காது.

h1

எனது கவிதை

ஜூலை 29, 2008

கவிதையை

கவிதையால் வடிக்க

எந்தக் கவியாலும்

இயலாது

நீ

கவிதை

நான்

கவிஞன்.

h1

குழந்தை

ஜூலை 16, 2008

ஆணும் பெண்ணும்

மகிழ்ச்சிக் கடலில்

மூழ்கி எடுத்த

விலை மதிப்பில்லா

முத்து

 

பத்து மாதம்

மணியறையில்

உறங்கி கிடந்த

ஒரு

சொர்க்கக் குவியல்

h1

என் மனைவி(காதலி)

ஜூலை 14, 2008

என் இனிய

காதல் தாமரையே

 

நீ…………

 

என் மனதினில்

விழுந்தாய் சித்திரையில்

 

என் நினைவினில்

வந்தாய் நித்திரையில்

 

என் இதயத்தினில்

உன்னாலான ஏக்கம்

 

ஆர்ப்பரிக்கும் கடல்போல்

அயராது தாக்கும்

 

குலமகளாய் நீ வந்தாய்

வைகாசித் திங்களன்று

 

வையகமே வாழ்த்தியது

நீ எனக்கு என்று

 

அன்று.

உலகத்தையே வென்றுவிட்ட

பூரிப்பு உன் உள்ளத்தில்

 

அன்று…

கனவுகள் நினைவாகிய

பேரானந்தம் என் உள்ளத்தில் 

.. உன் இதயமாகிய நான்

h1

இதயத்தின் குரல்

ஜூலை 14, 2008

என்னிடம்

“உனக்கு நான் யார்?”

என்று கேட்டாயே

 

கேள் இனியவளே……..

 

என்

இதயத்தின் துடிப்பாக நீ

காதலின் உருவாக நீ

பாசத்தின் பதிவாக நீ

கனவுகளின் ஊற்றாக நீ

உணர்வுகளின் உயிராக நீ

ஊக்கத்தின் உரமாக நீ

சாதனையின் கருவாக நீ

வெற்றியின் கனியாக நீ

முடிவினில் நீயே நானாக.

 

உன் நினைவாய் உன் இதயத்தின் குரல்.