
என் மனைவி(காதலி)
ஜூலை 14, 2008என் இனிய
காதல் தாமரையே…
நீ…………
என் மனதினில்
விழுந்தாய் சித்திரையில்…
என் நினைவினில்
வந்தாய் நித்திரையில்…
என் இதயத்தினில்
உன்னாலான ஏக்கம்…
ஆர்ப்பரிக்கும் கடல்போல்
அயராது தாக்கும்…
குலமகளாய் நீ வந்தாய்
வைகாசித் திங்களன்று…
வையகமே வாழ்த்தியது
நீ எனக்கு என்று…
அன்று….
உலகத்தையே வென்றுவிட்ட
பூரிப்பு உன் உள்ளத்தில்…
அன்று…
கனவுகள் நினைவாகிய
பேரானந்தம் என் உள்ளத்தில்…
….. உன் இதயமாகிய நான்