எதோ ஒரு வேகத்துல நானும் ஒரு வலைதளம் ஆரம்பிச்சுட்டேன். இனிமேல் என்ன பண்ணுறதுன்னு தெரியாம முழிச்சப்ப, ஒரு ஆதங்கத்த பத்தின ஞாபகம் வந்தது. சரி அதைப்பத்தி பதிவு பண்ணலாம்னு முடிவு செஞ்சேன். என்னோட ஆதங்கம் IT fieldல வேலை பார்க்கும் நண்பர்களை பத்தினது. ஏன்னா நானும் அதில் ஒரு அங்கம்.
இப்போ நம்ம நாட்டுல Software Engineer அப்படின்னாலே ஏதோ கோடிகோடியா சம்பாதிக்கிறான் அப்படிங்கற நினைப்பு பரவலா இருக்கு. வீடு வாடகைக்கு பாக்கலாம்னு போனா 2500ரூ உள்ள வீட 4500ரூ சொல்றாங்க, ஆட்டோல ஏறலாம்னா 30ரூ கூட சொல்றாங்க, ஒரு பக்கம் என்னடான்னா விலையேற்றத்துக்கு மூலகாரணமே software engineers அப்படின்னு சொல்றாங்க. அப்படி என்னய்யா நாங்க பாவம் பண்ணிட்டோம், எல்லாத்தயும் தூக்கி எங்க தலையிலயே போடுறீங்க. நாங்க தலையவே அடமானம் வச்சுதானே சம்பாதிக்கிறோம், புரியலியா,. எங்ககிட்ட இருக்கிற 1400கிராம் மூளைய மூலதனமா வச்சுதான் சம்பாதிக்கிறோமின்னு சொல்லுறேன், அதுக்காக எங்களுக்கெல்லாம் மூளையில்லயா அப்படின்னு கோபப்படாதீங்க. மத்த fieldல use பண்ணுற அளவை விட கூடுதலா இங்க use பண்ண வேண்டியது வருது.
எப்படின்னு கேட்டா, projectல எல்லாம் சரியா இருக்குற வரை ஒரு பிரச்சினையும் இல்லை, ஆனா நமக்கு project தரான் பாருங்க clientனு ஒருத்தன் அவன் onsiteல இருந்து deadline நெருங்கிடுச்சு அப்படின்னு ஒரு alarm அடிச்சான்னா நம்மாளுங்களுக்கு இங்க ஆப்பு. 24×7 வேலை பாக்க சொல்லி நம்மள கொன்னுடுவான் நம்ம PL அப்படிங்கறவன். உடனே பிரச்சினை எப்போதுதானே வருது அப்படின்னு கேள்வி தோணுதில்ல? நிச்சியமா சொல்லுவேன் நாங்கெல்லாம் relaxஆ இருக்குறது அதிகபட்சம் ஒரு வருஷத்துல ஒரு மாசந்தான். எனக்கு தெரிஞ்சு 3 வருஷம் நைட் ஷிப்ட் மட்டுமே வேலை பாத்த ஆளெல்லாம் உண்டு. எங்களுக்கெல்லாம் வேலை பாக்க வரைமுறை கிடையாது.
அப்படி வேலை பாத்து வேலை பாத்து நம்மாளுங்களுக்கு BP, Sugar, Colestral மற்றும் பேரு தெரியாத வியாதிங்க வந்ததுதான் மிச்சம். இப்பொல்லாம் doctorகிட்ட போனீங்கன்னா கண்டிப்பா ரெண்டு software engineerராவது check-upக்கு வந்திருப்பான். இப்படியெல்லாம்தான் இப்போ சம்பாதிக்கிறோம், இப்போ software engineersக்கு 50 வயசுக்கு மேல வர வேண்டிய வியாதியெல்லாம் 25ல இருந்து 30க்குல்ல வந்திருது. 40 வயசுல retirement வாங்கியே ஆகணும்.
இதெல்லாம் நீங்க பரிதாபப்பட சொல்லல, இந்த மாதிரி கஷ்டப்படுறவன பாத்து தயவு செஞ்சு வயிதெரிச்சல் பட்டு பழி போடவேண்டாமின்னுதான் கேட்டுகிறேன். ஆனா ஒரு விஷயம், இன்னிக்கு software இல்லைனா பல பேரு வேலை கிடைக்காம பரதேசியா அலைவான். மேலும் பல விஷயங்களப் பத்தி சீக்கிரம் பேசுவேன்.